மன்மோகன் சிங்க்

இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.

பாலகனைப் படிக்க விடு

இந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த 
பெறுபேற்றைப் பெற்ற  நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன்
சேதுராகவன் அமைச்சர் பந்துல குணவர்தனவை 
விழுந்து வணங்கி பரிசு பெற மறுத்தமை தொடர்பான 
கவிதை. 

கருணை பிறக்குதையா

கடல் கடந்த
தமிழருக்கு இப்போ
கருணை பிறககுதடா  

காணிகளை 
அரசு 
பதிவு செய்வதினால் 
கடல் கடந்த 
தமிழருக்கு தம் 
சொந்தங்கள் மேல்
கருணை பிறக்குதடா 
 

காரணத்தோடு பிறக்கும் 
காதலுக்கும் 
கருணைக்கும் 
அர்த்தம் இல்லை

இங்கிருக்கும் 
தமிழன் எல்லாம் 
தன்மான உணர்ச்சி வீரன் 

மிருக பலி

அமைச்சர் மேர்வின் சில்வா  முனிஸ்வரம்   
கோவிலுக்கு சென்று மிருக பலிக்கு எதிராக 
மிருகங்களை  அவிட்டு பொலீஸ் காவல்  நிலையத்தில் கையளித்தமை தொடர்பான கவிதை
 

மனிதனை 
கயிற்றால் கட்டுகின்றான்
கட்டின 
ஆட்டை 
அவிட்டு விடுகின்றான் 
மேய்ப்பதே 
இவன் வேலையாய்ப் போச்சு  

தீர்வே தீர்ப்பு

 

மூவரின்   மரண  தண்டனையை  எதிர்த்து  தீக்குளித்த செங்கொடி நினைவாக இக் கவிதை

 

உயிரை மாய்க்கும் அளவுக்கு
உணர்வு
உணர்வைத் தூண்டிய
தலைவர்களே 
இதற்குப்  பொறுப்பு

செங்கொடி!
உன் அன்னை
தந்த உயிரை
தமிழ் அன்னைக்கு 
ஈந்திருக்கிறாய் 

எழுத்தின் பலம் எழுந்தது போராட்டமாய்

"ஞானசுந்தரம் குகதாசன்- உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகைச சங்கம் பெருமையுடன் எழுதிய தலைப்பு இது."  

பூராயம் புடுங்காமல் எம் பொழுது விடியட்டும். .

 யார் அவள் 
கதையோடு 
கதை விட்டு 
காரியமாய்  
பூராயம் புடுங்குகின்றாள்

அவள்தான் 
மங்கையர்க்கரசி 
மாதர் சங்கத் தலைவி
மங்கையரின்
மானம் 
அடகு வைக்கும் 
மாதர் குல மாணிக்கம் 
மகத்தான சேவை செய்யும்
மகாராணி 

பண வீக்கம் ஞான சூனியம்

 துன்பமும் துயரமும் 
தேடலை வளர்க்கும் 
தேடி - ஞானத் 
தெளிவைக் கொடுக்கும் 
உற்றார் உறவின் 
உள்ளம் உணர்த்தும் உண்மை  
உலகம் புரியும்

தனிமையின் 
தன்மை விளங்கும் 
தேவையின் வலிமை 
தெரியும்  
பணத்தின் வீக்கம்
பாவம் புரியும் 
அடக்கம் கெடுக்கும் 
ஆணவம் மிஞசும் 
அறிவை அகற்றும்
ஞானத்தை சூனியம் ஆக்கும் 

திருந்தாத திருத்தங்கள்

மௌன விரதம்

 ஐம்புலன்களில் 
வாயின் 
தொழில் இரண்டு 
உண்பதும் 
உரைப்பதும் 

உண்ணாமல் இருந்து 
காக்கும் விரதத்தை விட 
உரைக்காமல் இருந்து 
காக்கும் விரதம் 
மேல்

மௌனத்தில் 
சக்தியின் 
சேமிப்பு அதிகம் 

வெறும் குடமாய் 
இருப்பவனுக்கும் 
நிறைகுடமாய் 
இருப்பவனுக்கும் 
இருவருக்கும் 
இதுவே நலம் 

உலகத் தமிழருக்கு சுவாரசியமான, பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் வழங்குவதே இவ் இனையத்தின் நோக்கமாகும்.

இவ் இணையத்தில் இணையும் எவரும் தமது ஆக்கங்களை இலகுவாக இவ் இணையத்தில் சேர்க்க முடியும்.

உங்களது ஆக்கங்களுக்கு முழு உரிமையாளர் நீங்களே. தமிழ் இணைய கோவை (Tamil Web Log .Com) மூலம் 77,000,000 தமிழருக்கு உங்கள் ஆக்கங்களை நீங்கள் கொண்டு செல்ல முடியும்.

உங்களது ஆக்கத்தை இணைக்கவோ, உங்களது விளம்பரத்தை பிரசுரிப்பதன் மூலமாக எம்மை ஊக்குவிக்கவோ அல்லது பதிப்புரிமை தொடர்பான வினவல்களுக்கோ எம்மை admin@tamilweblog.com என்ற் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்.